முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளை கைது செய்யக்கூடாது – ஐகோர்ட்

Default Image

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முன்ஜாமீன் மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்திய நிலையில், ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் மனு மீதான விசாரணையை மார்ச் 30க்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக நவீன்குமார் மற்றும் மகேஷ்குமார் இடையே தகராறு என புகாரளிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தில் தாமதமாக புகார் அளித்த நிலையில், 8 மாதங்கள் கழித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்