இதை செய்யாவிடில் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Default Image

மதுக்கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கெடு.

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. காடுகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களின் கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்பதால் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்