வதந்திகளை நம்பாதீர்கள் – முக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே சமூக வலைதளத்தில் கொரோனா பற்றிய வதந்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய மாநில அரசுகள், இன்னும் அதிகமாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கொரோன தொடர்பான அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, யாரேனும் கொரோனா வைரஸ் பற்றி வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.