திமுக பொருளாளர் துரைமுருகனை விமர்சித்த முதல்வர்.!

Default Image

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது கொரோனா தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார் என முதலமைச்சர் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இதற்கு பதில் கூறிய திமுக பொருளாளர் துரைமுருகன்,நாளை முதல் முக கவசம் அணிந்து தான் சட்டப்பேரவைக்கு வருவோம் என தெரிவித்தார். பின்னர் சட்டப்பேரவைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்