வாக்களித்த மக்களுக்கு நன்றி – மார்க் .கம்யூ ! அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள்..!

Default Image

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார் . இது குறித்து  கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்

மதச்சார்பற்ற அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து  களம் கண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அனைத்து தோழமைக் கட்சியின் தலைவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ ஆகியோர்  அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளனர்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்