திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி!

Default Image

இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யகோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் தி.க. தலைவர் கீ.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசினார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக மனுவில் ஜோஸத் புகார் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வேப்பரி காவல்நிலையத்தில் தான் புகார் அளித்துள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். எனவே, ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், ஆ.ராசா மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அது முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்