டெல்லி மாணவர்கள் தாக்குதல் எதிரொலி! தமிழகத்தில் மகளிர் கல்லூரிகளிலும் தொடரும் போராட்டம்!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. 
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தபட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு எதிராக நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடலூரில் கந்தசாமி மகளிர் கல்லூரியில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்