கஜா புயலால் கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்…!எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன் ரத்து ..!

Default Image

புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர்  கஜா புயல் எதிரொலியால் கடன்களை ரத்து செய்துள்ளார்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
 
அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர்  ஒருவர்  கடன்களை ரத்து செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் நான்கு ரோடு அருகே டீக்கடை வைத்துள்ளவர் சிவகுமார். இவர் தனது கடையில் கடன் வைத்துள்ளவர்களின் கடன்களை, கஜா புயல் பாதிப்பு காரணமாக, தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார். தனது கடையில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.இவரது மனிதாபிமானத்தை மற்ற கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்