தமிழகத்தில் ஊரடங்கு மீறல்.! 2,39,239 பேர் கைது, ரூ.1,17,76,394 அபராதம்.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 2,39,239 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியே சுற்றிய 2,03,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,17,76,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்