இன்று முதல் கல்லூரிகள் திறப்பு.. தமிழக அரசு அனுமதி.!

Classes for final year college students will start in Tamil Nadu from today. Only 50% of the total student body should be allowed on campus.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும், ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது.

பின்னர், படிப்படியாக கோவில்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அரசு அனுமதி வழங்கியது.  இதைத்தொடர்ந்து, தற்போது கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது.

மொத்த மாணவ மாணவியரில் 50% மட்டுமே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் நோய் பரவலை தவிர்க்கும் வண்ணம் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.