நூல் விலையை குறைக்க பியூஷ் கோயலிடம் முதல்வர் வலியுறுத்தல்!

Default Image

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகளையும் விளக்கியுள்ளார்.

நேற்று மேற்கு மாவட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பருத்தி விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சரை தொடர்புகொண்டு, முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்