பொங்கல் பண்டிகை .! இன்று முதல் பேருந்துகளுக்கான முன்பதிவு .!

Default Image
  • பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பேருந்துக்கான முன்பதிவு டிக்கெட்  இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
  • ஜனவரி13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னையில் இருந்து அதிக மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை பொங்கல் வரை விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.  இதை தொடர்ந்து அரசு விரைவுப் பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூட்ட நெரிசலைப் பொறுத்து பொங்கலுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக  ஜனவரி13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றும் , ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும் செய்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்