#BREAKING: தகுதி தேர்வில் வெல்லாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது – ஐகோர்ட்

தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாணையின்போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுமாறு ஏற்கனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு தரமான கல்வி சென்று சேர வேண்டுமானால், அதற்கு தகுதியான நபர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தகுதி தேர்வில் வெல்லாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது என்றும் அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும் நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.