#BREAKING: துப்பாக்கியை காட்டி மிரட்டி முத்தூட் அலுவலத்தில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை.!

Mysterious gang looted gold jewelery worth Rs 7 crore from Muthoot Accounting Company office in Hosur, Krishnagiri district.

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளை அடித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர்.

அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாகலூர் சாலையில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.