#BREAKING: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Default Image

முரசொலி அலுவலக இடம் வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளதாக எல் முருகன் கருத்து தொடர்பான வழக்கில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எல் முருகன் கருத்து தெரிவித்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்