#BREAKING: மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டியிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில், திண்டுக்கல், கோவை மாநகராட்சிகளில் 63 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர், துவாக்குடி, லால்குடி, துறையூர், மணப்பாறை, தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.