#BREAKING: 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடு கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை

Default Image

முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேலைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலை செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்