#BREAKING: நவம்பர் 6-ல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

Default Image

அக்.2-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நவ.6-ல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி.

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி தராவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தையுடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதற்கு தமிழக காவல்துறை தரப்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அக்.2-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நவம்பர் 6-ல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்