#BREAKING: 85 கி.மீ வேகம்! நாளை இரவு கரையை கடக்கும் மாண்டஸ்!

Default Image

மாமல்லபுரம் அருகே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது.

நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரத்திற்கு அருகே நாளை நள்ளிரவு அல்லது அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் மாலையில் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 65 – 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.  வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்