சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் – சீமான்

Speaking to reporters in Chennai, Seeman said that anti-Indians are those who ask for citizenship from their own people.

சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக தெரியவில்லை. இதனால் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எண்ணற்ற பேராபத்துகள் இருப்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்திக்கிறோம். ஒரே கல்வி கொள்கை, ஒரே தேர்தல் போன்று ஒரே வேளாண் சந்தையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என தெரிவித்துள்ளார்.