அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் – அமைச்சர் ஆர் பி உதயகுமார்!

Default Image

வருகின்ற ஜனவரி 16-ல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்று இருப்பவர்கள் மட்டுமே காளையுடன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும், அதிகபட்சமாக 300 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் எனவும், 7 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பற்றி ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live rn ravi
TVK Leader Vijay
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisami
Former CSK player Suresh Raina
KRR vs GT - IPL 2025
Pope Francis died
Counterfeit 500 rupee note