மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு! 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் … Read more

பல்வேறு தடைகளை தகர்த்து ஜல்லிக்கட்டை மீட்டது திமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

MK Stalin - Alanganallur Kilakarai Jallikattu stadium

இன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை கிராமத்தில் வகுத்தமலை அடிவாரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 5000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் 66 ஏக்கரில் பிரமாண்டமாக இந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த பிரமாண்ட மைதானத்தை முதல்வர் திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டை … Read more

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Jallikattu

தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் பார்க்கும்படியான வசதிகள் முழுமையாக இல்லை. இதனால்,  பார்வையாளர்களை கருத்தில் கொண்டு அனைவரும் பார்க்கும்படியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வகுத்தாமலை அடிவாரத்தில் தமிழக அரசு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, 44 கோடி ரூபாயில் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடித்தது. … Read more

ஜல்லிக்கட்டு காளைக்கு உயிரோடு சேவல் – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

Jallikattu

சமீபத்தில், ஜல்லிக்கட்டு காளைக்கு வலுக்கட்டாயமாக சேவல் ஊட்டுவது போன்ற வீடியோ ஒன்றை யூடியூபர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில், கால்நடைகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. தற்பொழுது, இது தொடர்பான விசாரணையில் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!

Abi Siddhar - Alanganallur Jallikattu 2024

கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. கீழக்கரை ஜல்லிக்கட்டு – … Read more

650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

puthukottai jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி … Read more

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியில்லை.! ஆட்சியர் உத்தரவு.!

Manjuvirattu 2024 Pudukottai

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது வாடிவாசல் வழியாக வரிசையாக ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதனை வாடிவாசல் அருகே மாடுபிடி வீரர்கள் பிடிப்பார்கள். சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!  இதில் மாடுகள் பிடிபட்டால் வீரர்கள் வெற்றி என்றும் , மாடு பிடிபடவில்லை என்றால் மாடு வெற்றிபெற்றது என்றும் அறிவிக்கப்படும். … Read more

விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! காளைகள் முதல் டாஸ்மாக் வரை கட்டுப்பாடுகள் தீவிரம்.!

Avaniyapuram Jallikattu

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 15 பொங்கல் தினத்தில்) அவனியாபுரத்திலும் அடுத்து (ஜனவரி 16 மாட்டு பொங்கல் அன்று) பாலமேட்டிலும் அதற்கு அடுத்ததாக ஜனவரி 17 காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. நாளை அவவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு … Read more

திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

jallikattu

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமானது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி அந்த போட்டி தான். அதனை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. அதைப்போல, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதி என … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை- நீதிமன்றம் உத்தரவு..!

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு  நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் … Read more