நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்!

Saidapet court summons actor Vijay Sethupathi and his manager Johnson

நடிகர் மகாகாந்தி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்.

பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில், ஜனவரி 4 -ஆம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதாக மகா காந்தி மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.