நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் தொடர்ந்த வழக்கு – தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Default Image

நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மாற்றி கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தியிருந்தார்.

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, செப். 27க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்