செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்! சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு!

senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011-15ல் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்..!

தற்போது, அந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் கூறியுள்ளது.

கடந்த 2017ல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில் தெரிவித்துள்ளது. இதன்பின், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை பிப்.2ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் ஒத்திவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh