தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பதியேற்றார். இந்த நிலையில் முதலவர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தமிழக அரசு படைத்த சாதனைகள், தொடங்கப்பட்ட திட்டங்கள், புதிய மாவட்ட அறிவிப்புகள் அடங்கிய மலர் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிகழ்ச்சியில் அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் முதல் மலர் புத்தகத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பூங்கொத்துகள் வழங்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.