தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது.!

Default Image

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் வெளியே சுற்றியதால் 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.82,32,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக இதுவரை 1,84,748 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss
Actor Rajinikanth - Actor Ajithkumar
US China Tariff War