காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

Default Image

ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த துணை ஆணையர் விமலா உள்பட 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் துணை ஆணையராக இருந்த அரவிந்த், சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத், கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், செங்கல்பட்டு எஸ்பியாகவும், சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குநர் ஜெயலட்சுமி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் ரயில்வே ஐஜியாக இருந்த கல்பனா நாயக், மின்வாரிய பிரிவு விஜிலன்ஸ் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்ட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்