அலர்ட் மக்களே.. கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை..

Default Image

கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தற்போது கர்நாடகா,  கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சில இடங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கோவா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஹாராஷ்டிரா வில் மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டடுள்ளதால், அம்மாநில மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்