மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியது -மோடி ..!

Default Image

288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக  21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரு பக்கம் பாஜக, சிவசேனா ஆகிய  இரு கட்சிகளும்  , மற்றோரு பக்கம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி  அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில்  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேசினார்.அப்போது அவர் ,மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால் நாடு அழிந்து விடும் என சிலர் கூறினர். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்து விட்டதா என மோடி கேள்வி எழுப்பினார்.
முன்னாள்  நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக  முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பண மோசடி வழக்கில் சிக்கி  கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது என  மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்