முடிந்தால் சிவசேனாவை உடைத்து பாருங்கள்! அப்படி நடந்தால்… : சவால் விடும் உத்தவ் தாக்கரே!

மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார். முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் … Read more

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் – சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது … Read more

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் ! பாஜக தொடர்ந்து முன்னிலை

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் : பா.ஜ.க – 182 காங்கிரஸ்  – 87 மற்றவை – 19

மின்சாரம் இல்லாமல் மெழுகுவர்த்தி மூலம் வாக்குப்பதிவு ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் புனே  தொகுதியிலுள்ள சிவாஜி நகர் வாக்குச்சாவடியில் திடீரென மின்சாரம் நின்றது. வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் வாக்குச்சாவடி இருண்டு காணப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி  உள்ளதால் வாக்குப்பதிவு சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து … Read more

மாகாராஷ்டிராவில்  தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர்

மாகாராஷ்டிராவில்  தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.அதேபோல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்  மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை … Read more

ஹரியானா , மகாராஷ்டிரா காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி ஹரியானாவில் 8.73% வாக்கு பதிவு நடைபெற்று உள்ளது.மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 5.46% வாக்கு பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில்  90 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று தேர்தல்

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.மேலும் ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. இதற்காக  இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.இரண்டு … Read more

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நிறைவு பெற்றது பிரச்சாரம்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக இந்தியாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.இந்த நிலையில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.இரண்டு மாநிலங்களிலும் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.24-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.        

மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியது -மோடி ..!

288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக  21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு பக்கம் பாஜக, சிவசேனா ஆகிய  இரு கட்சிகளும்  , மற்றோரு பக்கம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி  அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில்  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் … Read more