'பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்' – இந்திய வெளியுறவு அமைச்சகம்!

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் பேச்சுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.

Ministry of External Affairs of India

டெல்லி :பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிட்ட இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் பாகிஸ்தான் மக்களிடம் பேசிய அசிம் முனிர், ”இந்தியாவால் அச்சுறுத்தப்பட்டால் பாகிஸ்தான் ‘உலகின் பாதியை அழித்துவிடும்’ என்று மறைமுகமாக அணு ஆயுத மிரட்டல் விடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானை ‘பொறுப்பற்ற அணு ஆயுத நாடு’ என்று விமர்சித்து, இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

இந்த கருத்துக்கள் நட்புரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணிலிருந்து கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வருந்தத்தக்கது என்றும், பாகிஸ்தானை “அணு ஆயுதங்களைக் கொண்ட பொறுப்பற்ற நாடு” என்றும், “அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வது பாகிஸ்தானின் வர்த்தகப் பங்கு ” என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இதன் மூலம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து, இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

unknown node