இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் -ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு .!

Default Image
  • நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். 
  • ஜெகன்மோகன் ரெட்டிதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.  ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம்” என கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  மத்திய அரசின் அடுத்த திட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டது.அதில் 14 லட்சம் பேர் பெயர்கள் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் கடப்பா நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம்” என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்