முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை திறந்து வைத்த இந்நாள் பிரதமர் மோடி!

Default Image
  • முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 
  • இதனை தொடர்ந்து லக்னோவில் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் லோக்பவன் எனுமிடத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், லக்னோவில் வாஜ்பாய் பெயரில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்