கொரோனாவிற்கு எதிராக போராட கோமியத்தை அருந்த வேண்டும் – பாஜக தலைவர் திலிப் கோஷ்.!

Default Image

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

இந்நிலையில்,கொரோனாவிற்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து திலிப் கோஷ் கூறுகையில், நான் பசுவை பற்றி பேசினால் பலருக்கு பிடிக்காது. பசு மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது. இந்தியர்கள் பசுக்களை வணங்கி வருகிறோம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க கோமியத்தை அருந்த வேண்டும். மேலும், பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி புரியும் என கூறுகிறார். திலிப் கோஷ்  இதுபோல பேசுவது முதல் முறையல்ல, இதற்கு முன் கடந்த ஆண்டு பசுவின் பாலில் தங்கம் உள்ளது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலிப் கோஷின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்