காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு!

Default Image

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் போராட்டம் வெடித்ததாகவும், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்