உண்மையான ஹீரோக்கள் யார் என உலகம் புரிந்து கொண்டது – ராஜ்நாத் சிங்!

Default Image

இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார்.

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளும் வரை இந்த போராட்டம் தொடர தான் செய்யும்.

கொரோனா நெருக்கடிக்கு பின்பதாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் தான் உண்மையான சூப்பர் மேன் மற்றும் ஆச்சரியமான பெண்மணிகள் என இந்த உலகம் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் தன்னலமின்றி சேவையாற்றிய அவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்