கணவரின் பேச்சை மறுத்து தாயை காண சென்ற மனைவி.! ஆத்திரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகன்.!

Default Image

கணவரின் பேச்சை மறுத்து அவரது தாயை மனைவி காண சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் மாமியாரை கொலை செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் 28 வயதான நபரின் மனைவி அவரது தாயின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால் கோவமடைந்த கணவன் மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்களன்று கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் 45வயதான அவரது மனைவியான ரேகா சர்மா அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

உடனடியாக விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் இறந்த ரேகாவின் வீட்டிற்கு ரெயின்கோட் இட்ட ஒருவர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ரேகாவின் போன் அழைப்பு விவரங்களையும், குடும்ப உறுப்பினர்களுடனும் நடத்திய விசாரணையில் மருமகனான பிரபுல் சியாலி என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவரது கர்ப்பிணி மனைவியை அவரது தாயான ரேகாவின் வீட்டிற்கு செல்ல கூடாது என்று விலக்கியதாகவும், ஆனால் அதனை அவரது மனைவி மறுத்து விட்டு தாய் வீட்டுக்கு செல்வதாகவும், அதனால் கோவமடைந்த பிரபுல் ரேகாவை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்