திருட வந்த இடத்தில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதிய திருடன்..!

Default Image
  • தான் திருட வந்த வீட்டில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதி வாய்த்த திருடன்.
  • காவல் துறையின் திசையை திருப்பவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறிவருகின்றனர்.

கேரளா மாநிலம், திருவன்குளத்தை சேர்ந்தவர், ஐசக் மணி. கடந்த சில தினங்களாக வெளிஊர் சென்றார். வீடு திரும்பிய அந்த ராணுவவீரர் வீட்டில் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கூறியதாவது,

திருடன் ஒருவன், ஒரே நாளில் 6 இடங்களில் திருடுவதாக முடிவெடுத்துள்ளான். ஐந்து வீடுகளில் திருடிய அந்த திருடன், ஆறாவதாக ஒரு வீட்டிற்குள் திருட வந்துள்ளான். அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததும் அது ஒரு முன்னாள் ராணுவ வீரரின் வீடு என்பது தெரியவந்தது. இதனை அறிந்த அந்த திருடன், அந்த வீட்டின் இருந்த சரக்கில் ஒரு டம்பளர் குடித்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளான்.

அவன் எழுதிய கடிதத்தில், “இது ராணுவ வீரரின் வீடு என தெரிந்தால் வீட்டின் பூட்டை கூட உடைத்திருக்கமாட்டேன்”. மேலும் அதில் “திருடுவது தவறு” என கூறி, தான் திருடிய பையையும் அந்த ராணுவ வீரரின் வீட்டில் வைத்துவிட்டு காவல்துறைக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தான்.

அதில் அவன், “இந்த பையிலுள்ள பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள்” எனவும் கூறினார். திருடன், காவல் துறையின் திசையை திருப்புவதற்காகவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்