Pocso : மாணவியை அனாகரிகமாக பேசியவரை சிறையில் அடைத்த மும்பை போக்சோ நீதிமன்றம்

Default Image

மும்பையை சேர்ந்த  16 வயது பள்ளி மாணவியை ‘ITEM’ என்று கூறி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு  ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை சேர்ந்த இந்த தொழிலதிபர் 2015 ஆம் ஆண்டில் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியின் தலைமுடியை இழுத்து  ‘ITEM’ என்று கூறி எங்கே செல்கிறாய் என்று கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

இந்த வழக்கினை விசாரித்த மும்பை போக்சோ நீதிமன்றம் ஒரு பெண்ணை “ஐட்டம்” என்று அழைப்பது மற்றும் அவரது தலைமுடியை இழுப்பது அவளுடைய அடக்கத்தை சீர்குலைப்பதாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 இன் கீழ் தண்டனைக்குரியது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்