டெல்லி மெட்ரோ ரயிலில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் 100 பேருக்கு அபராதம் .!

Default Image

கொரோனா தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 100 மெட்ரோ பயணிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்தனர்.

மெட்ரோ நிலையங்களில் உள்ள காவல்துறையினர் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றப்படாத நபர்களை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் சவால் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு நாட்களில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 1,903 மெட்ரோ ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, 100 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று காவல்துறை துணை ஆணையர் ஜிதேந்திர மணி கூறினார்.

இந்நிலையில், அனைத்து மெட்ரோ பயணிகளும் முகக்கவசங்களை அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், உங்கள் பாதுகாப்பிற்காக சானிடைசர் பயன்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen