பாஜக இந்த 3 விஷயங்களில் பொய் மட்டுமே கூறுகிறது – ராகுல்காந்தி கடும் சாடல்.!

Default Image

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆங்கில செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட்டில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால்,  இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, அந்த செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா பரிசோதனை, இறப்பு விபரங்கள். புதிய கணக்கீடு முறைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவது, சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தை ஊடகங்களை அச்சுறுத்துவது போன்ற விஷயங்களில் பாஜக அரசு பொய்களை கூறி வருகிறது என கூறியுள்ளார்.

மேலும், இந்த மாயை  விரைவில் நொறுங்கும் என்றும் இதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்