டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் சுமன் துபே மற்றும் பிறரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் […]
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். […]
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர வரி (இறக்குமதி வரி) விதிமுறையை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு […]
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய அவர், 2027 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதால், பாஜகவுக்கு மறைமுகமாக வேலை செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய […]
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் 26வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை மத்திய […]
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக UGC பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் யுஜிசி புதிய நெறிமுறைகள் திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில விஷயங்களை குற்றம் சாட்டி வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே […]
டெல்லி : இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் ஆறு யமுனை.எனினும், இது மிகவும் மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது, குறிப்பாக டெல்லி, அக்ரா போன்ற நகரங்களில் ஆற்றில் கழிவுகள் கலந்து வருகின்றன என்கிற செய்தியும் அடிதடி வெளியாகி வருகிறது. தொழில்துறை கழிவுகள், வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை ஆற்றின் தரத்தை மோசமாக்கி விட்டன. ஆறுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பல பகுதிகளில், நீர் கறுப்பாக மாறி, […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.20) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் […]
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்து தலையில் அடிபட்டது. கீழே விழுந்து காயமடைந்தவுடன் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களை சந்தித்து “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது […]
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே வந்து சத்தமிட்டு கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பாங்னோன் கொன்யாக் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், இதற்கு கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் ” பழங்குடியின பெண் எம்பியை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை […]
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம், காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக எம்பிபிகள் போராட்டம், பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிழே விழுந்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. பாஜக – காங்கிரஸ் என இரு கட்சியினரும் நாடாளுமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படியான சூழலில் மக்களவை எதிர்க்கட்சி […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல, காங்கிரஸ் கட்சியினர் அமித்ஷா பேச்சை திரித்து கூறுவதாக பாஜக எம்பிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை அடுத்து மக்களவையில் கடும் அமளி, […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நாடாளுமன்ற வளாகத்தில் தவறி விழுந்துள்ளார். இவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. இந்த எதிர்பாரா சிறு விபத்து குறித்து அவர் ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அம்பேத்கர் குறித்த இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். நேற்று முதலே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா மன்னிப்பு கேட்க […]
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில் “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 […]
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு அமித் ஷா விமர்சித்த நிலையில், அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்களன்று தொடங்கி இன்று வரை எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதானி குறித்து அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ள குற்றசாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் எனவும், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு […]