பரபரப்பு.! இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை.!

Default Image
  • எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
  • 21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த தினம் நாத்துவா கா திபா எனுமிடத்தில், பாகிஸ்தான் சிறப்பு சேவை பிரிவைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தாக்குதலை நடத்தினர், அதில் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் செய்தனர். இதனிடையே இந்திய வீரர்கள் சற்றும் யோசிக்காமல் பதிலடி கொடுத்ததால் பாக்கிஸ்தான் சிறப்பு சேவை பிரிவை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தாக்குதலிலிருந்து பின்வாங்கினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட  21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்