காதலிக்காக எல்லை தாண்டிய இளைஞர் கைது..!

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டிய 21 வயது மதிப்புத்தக்க  பாகிஸ்தான் இளைஞரை ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் BSF கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 21 வயதான பாகிஸ்தான் இளைஞர் சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய மும்பை பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை சந்திக்க  வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்திற்கு அருகே இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் அந்த … Read more

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் இ-பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், கோவையில் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த வகையில் குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றது. கேரளாவை ஒட்டியுள்ள 13 தமிழக எல்லைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து … Read more

எல்லைகள் திறக்க தாமதப்படுவதால், மீண்டும் சவூதி அரேபியாவில் விமான தடை!

சவூதி அரேபியாவில் இயங்கி வந்த விமானங்கள் எல்லைகளை திறக்க தாமதப்படுத்துவதால் மீண்டும் இயக்கத்தை நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, விமானங்கள் போக்குவரத்துகள், தொழிற்சாலைகள் மற்றும் அணைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. சில மாதங்களாக தான் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும், மக்களின் நிலையையும் நினைத்து அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதிலொன்றாக விமானங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவிலும் விமானங்கள் … Read more

நிவர் புயல் எதிரொலி : தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல்!

நிவர் புயல் காரணமாக விபத்துகளை தடுக்க தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சேதங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல இடங்களில் நிவாரண பொருட்களுடன் தயாராக உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் புதுப்பித்து எனும் இரு மாவட்டங்களையும் … Read more

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்கிறார்…

இந்தியாவின் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். தற்போது  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் எல்லையில் சீனா ஏப்ரல் மாதம் முதல் எப்படி … Read more

எங்கள் கைகள் பூப்பறிக்காது.! இரு அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் முறியடிப்போம் – எச்சரிக்கை விடுத்த பிபின் ராவத்.!

வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் இரு நாட்டு அச்சுறுத்தலை இந்தியா ஒரே நேரத்தில் முறியடிக்கும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக்கில் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பின்னர் பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் … Read more

எல்லையில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம் – இந்திய ராணுவம் தகவல்.!

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய  300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அளித்த பேட்டியில், எல்லையில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைய  தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் அந்த இடத்தில் நமது வீரர்கள் இருந்தனர். அப்போது, அங்கு  அமைக்கப்பட்டு உள்ள  இரும்பு வேலி வழியாக நுழைய முயன்ற … Read more

வளர்த்த கிடா மார்பில் முட்டியது….இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்… சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்…

இந்தியாவுக்கு சொந்தமான  லிபுலேக், காலாபாணி, லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவ   இந்தியா – சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.  ஆனால் அந்த பகுதிகளை  … Read more

தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.!

கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள தமிழகர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்சில் வந்த 3 பேரும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஊரடங்கு பின்பற்றி வரும் நிலையில், பல விஷயங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.  இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ம் … Read more