அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறையின் இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை முன்னதாக நடைபெற்று வந்தத நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் , இந்த வழக்கு விசாரணையை மேல் அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
இருந்தாலும், கடந்த ஜூன் 25இல் இதே மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அதனால், தற்போது கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு விசாரணையில் இருப்பார் என்றும், ஜாமீனில் வெளியில் வர முடியாத சூழல் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.