நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனு -தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Default Image

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

மருத்துவ படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது . இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

இதனிடையே   நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஓன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் , இந்த மனுவை தள்ளுபடி  செய்வதாக அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்