“வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளியுங்கள்”- ராஜஸ்தான் முதல்வர்!

Default Image

கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்த நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு கூறினார். இதற்கான பணிகள் ஜெய்ப்பூர் மாவட்டம், சோமு அருகேயுள்ள சமோத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டனர். மேலும், ஓரிரு நாட்களில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் இந்த வெட்டுக்கிளிகள் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்