சந்தனமர கடத்தல் தொடர்பான தகவல் கசிவு – 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட்!

Default Image

சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான விசாரணை தகவல்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரிவித்து உதவி இருக்கிறார்கள் எனவும், இவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மேலும் சில குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்