9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

Default Image

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியை 3 தவணைகளாக வழங்கும் திட்டம் என்றும் முழுத் தொகையும் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளை செல்லும் எனவும் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்